சரி இனி இந்த புண்ணிய பூமிக்கு எப்படி செல்ல வேண்டும் என்றும் எவ்வாறு சென்றால் இறை அருள் மிக பரிபூரணமாக கிடைக்கும் என்றும் பார்ப்போம்.
முதலில் நாம் அஹோபில மலையை பற்றி தெரிந்து கொள்வோம்.மகா சர்ப்பமாக ஆதிசேசன் கிழக்கு மலை தொடராக படுத்திருக்கின்றார் என்பது ஐதீகம்.அவரது தலைப்பகுதி திருப்பதி,நீண்டு சுருங்கும் வால்பகுதி ஸ்ரீசைலம்.மத்திய உடல் பகுதி
தான் இந்த அஹோபிலம்.இந்த மூன்று கோவில்களும் ஒரு தொடர்ச்சி மலையில் உள்ளது என்பது வியப்பு.உண்மையான பக்தியும் உடளுருதியும் இருந்தால் மட்டுமே அஹொபிலத்தின் நவ நரசிம்மர்களை தரிசனம் செய்ய முடியும்.ஏன் என்றால் இந்த எம்பெருமான் கொண்ட அவதாரம் ஒரு தனி நபருக்காக உண்மையான பக்திக்கு எடுக்கப்பட்ட அவதாரம்.
சத்திய சொரூபமாக,மகாபுருஷனாக,நெருப்பின் உக்கிரத்தோடு நரசிம்மர் இங்கு ஒரு உயரமான குகையில் அமர்ந்துகொண்டு அருள்பாலிக்கின்றார்.
கருடன் தவம் செய்த மலை என்பதால் இம்மலைக்கு இன்றும் கருடாசலம் என்ற பெயர் உண்டு.பிற தெய்வங்களும்,தேவர்களும்,ரிஷிகளும்,சித்தர்களும் மட்டமே சென்று வழிபட்டு வந்த திருத்தலம் இன்று நம்மைப்போன்ற சாதாரண மனிதர்களும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றம் பெற்று உள்ளது.
சரி இனி இந்த அஹோபில மலை பயணத்தை தொடங்குவோம்.மனதையும்,உடலையும் தயார் படுத்திக்கொண்டு இந்த புண்ணிய பயணத்தை தொடங்கிநோம்.இரண்டு நாள் பயணம்.
பயணத்தை தொடங்கும் முன்பு என்னென இடங்கள் இந்த புனித பூமியில் இருக்கின்றது என்பதை பாப்போம்.
அஹோபிலம் இரண்டு ஸ்தலங்களாக அமைத்து உள்ளது,அவை
1. கீழ் அஹோபிலம்,
2. மேல் அஹோபிலம்.
1.கீழ் அஹோபிலம் :
கீழ் அஹோபிலம் என்பது மலை அடிவாரம்.இங்குதான் அஹோபில மடம்,உணவு விடுதிகள்,தங்குவதற்கு வாடகை ரூம்கள்,கடைகள் உள்ளது.கீழ் அஹோபிலதில் தான் பிரகலாத வரதர் கோவில் உள்ளது.இந்த கோவில் நவ நரசிம்மர்களில் வராது.
இந்த பிரகலாத வரதர் கோவில் உள்ள இடம் தான் கீழ் அஹொபிலத்தின் மையப்பகுதி.கீழ் அஹோபிலத்தில் உள்ள இடங்கள்
1.பிரகலாத வரதர் கோவில் (கீழ் அஹோபில நரசிம்மர் கோவில்)
2.பார்கவ நரசிம்மர்(ஆறாவது நரசிம்மர் - கீழ் அஹோபிலத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம்)
3.சத்ரவட நரசிம்மர்(எட்டாவது நரசிம்மர் - கீழ் அஹோபிலத்தில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம்)
4.யோகானந்த நரசிம்மர்(எழாவது நரசிம்மர் - எட்டாவது நரசிம்மர் - கீழ் அஹோபிலத்தில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம்)
5.பாவன நரசிம்மர்(ஒன்பதாவது நரசிம்மர் -கீழ் அஹோபிலத்தில் இருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும்.ஜீப்பில் தான் செல்ல முடியும்.மேல் அஹோபிலத்தில் இருந்தும் செல்லலாம் நடை பயணமாக.சுமார் 7 கிலோமீட்டர் தூரம்.காட்டு பயணம் )
2.மேல் அஹோபிலம் :
மேல் அஹோபிலம் என்பது தான் கருடாத்திரி மலை என்று அழைக்கபடுகின்றது.மேல் அஹோபில மலையில் தான் இரன்னியனை வதம் செய்ய தூணைப் பிளந்து எம்பெருமான் நரசிம்மர் உருவம் கொண்டு வெளிவந்தார்.அந்த சக்தி உகத்தில் இருத்த இரன்னியனின் அரண்மனையையும்,பெருமான் வெளிவந்த தூணையும் இன்றும் காணலாம்.அந்த தூண் இந்த கலியுகத்தில் உக்கரஸ்தம்பம் என்ற பெயர் கொண்டு விண்ணை முட்டி நிற்கின்றது.அத்துணை பிரம்மாண்டம்.இந்த தூணின் அடியில் உள்ள குகையில் தான் ஜ்வால நரசிம்மராக ஆக்ரோஷம் கொண்டு இரண்யனை வதம் செய்யும் நிலையில் உள்ளார் எம்பெருமான்.இந்த அற்புதத்தை பின்னர் பாப்போம்.
மேல் அஹோபில மலையில் உள்ள இடங்களைப் பற்றி பார்ப்போம்.கீழ் அஹோபிலத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் மலைப்பயணம்.அணைத்து வாகனகளிலும் செல்லலாம்.மலை ஏறும் போதே அந்துனை அமைதி,ரம்மியம்.
1.கரஞ்ச நரசிம்மர்(மேல் அஹோபிலம் செல்லும் போது ரோட்டின் வலது புறம் உள்ளது)
2.அஹோபில நரசிம்மர்(மேல் அஹோபிலக் கோவில் மிக பழமையான கோவில்)
3.வரஹா நரசிம்மர்
4.ஜ்வாலா நரசிம்மர்(குகைக்கோவில் - உக்கரஸ்தம்பம் என்ற தூணின் அடியில் உள்ளது - நரசிம்மர் இரன்னியனை வதம் செய்த இடம்).இதன் அருகிலே ரத்தகுண்டம் என்ற ஊற்று உள்ளது.இரன்னியன் வதம் முடிந்த பின்பு எம்பெருமான் நரசிம்மர் தனது திருக்கரங்களை கழுவிய இடம்.இன்றும் சிவப்பாக உள்ளது.ஆச்சர்யம்.
5.மாலோல நரசிம்மர்
6.பிரகலாத மெட்டு அல்லது பிரகலாத மேடு(பக்த பிரகலாதன் வேதம் படித்த குருகுலம்.இன்றும் பிரகலாதன் திருக்கரத்தால் "ஓம் நமோ நாராயணா" என்று எழுதிய எழுத்துக்கள் இந்த குருகுல பாறைகளின் மீது உள்ளது.வியப்பின் உச்சம்.)
இனி பயணங்கள் தொடரும்..
Comments
Post a Comment